மேலும்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியாவுடன் உடன்பாடு செய்ய அனுமதி

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான செலவுகளில் ஒரு பகுதியை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இது தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலர், இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளார்.

இதற்கு சிறிலங்கா அமைச்சரவையின் அனுமதியைக் கோரும் பத்திரத்தை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சமர்ப்பித்திருந்தார்.  அதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *