மேலும்

5 ‘கறுப்பு ஆடு’களை கட்சியில் இருந்து நீக்கியது சுதந்திரக் கட்சி

மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.

பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் ஐந்து உறுப்பினர்களே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, எஸ்.பி.திசநாயக்க, டிலான் பெரேரா, ஏஎச்எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒழுக்காற்று விசாரணைகளை அடுத்து இவர்களின் உறுப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *