மேலும்

புலிகள் அழிக்கப்பட்ட நாளே வாழ்வின் முக்கியமான நாள் – முரளிதரன்

2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்று, சிறிலங்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ‘வியத்மக’ அமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா விடுதியில் இன்று மாலை நடந்த, இந்த மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘சமாதான பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர்.

இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப் புலிகள் தவறிழைத்தனர். அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர்.

2009 இல், போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாகும்.

சிறிலங்காவை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும். அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே அடுத்த அதிபராக தெரிவு செய்யப்பட வேண்டும் .

கிரிக்கெட்  வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது. சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர்.

ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள, அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும்.

சில விடயங்களை சாதித்த, மக்களை பாதுகாக்கக் கூடிய ஒருவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மக்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம். அவ்வாறான தலைவருக்கே  நான் வாக்களிப்பேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *