மேலும்

சிறிலங்காவின் நிலத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தாது – தூதுவர் ரெப்லிட்ஸ்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

‘வலுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி சிறிலங்காவின் இறையாண்மையை ஊக்குவிக்கும்.

அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க உதவுவதன் மூலம், சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்களிக்க அமெரிக்கா விரும்புகிறது.

புனரமைக்க முன்மொழியப்பட்ட அனைத்து வீதிகளின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை சிறிலங்காவே வைத்துக் கொள்ளும்.

எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா சொந்தமாக்கவோ, கட்டுப்படுத்தவோ, நிர்வகிக்கவோ மாட்டாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *