மேலும்

சிறிலங்கா படைகளுடன் பிரித்தானிய இராணுவமும் கூட்டுப் பயிற்சிக்கு ஆயத்தம்

சிறிலங்கா படைகளுடன் இணைந்து பிரித்தானிய இராணுவம் இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக, பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள  பிரித்தானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேவிட் அஸ்மன்  மற்றும் நான்கு  பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளனர்.

தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் மத்திய படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய படைகளின் கட்டளைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வாதுகேயுடன் இவர்கள், பிரதானமாக, இந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், சிறிலங்காவின் முப்படைகளுடன் பிரித்தானிய இராணுவம் நடத்தவுள்ள ‘மனிதாபிமான உதவி மற்றும் இடர் மீட்பு’ ஒத்திகை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *