மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு
சிறிலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு,சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம், வரும் ஜூன் 21ஆம் நாளுடன் முடிவடையவிருந்தது.
இந்த நிலையிலேயே அவருக்கு, ஜூன் 22ஆம் நாளில் இருந்து, 2019 டிசெம்பர் 31ஆம் நாள் வரை சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.