மேலும்

அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஜேவிபி தனித்து வேட்பாளரை நிறுத்தும் என்று, அந்த கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான லால் காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“அதிபர் தேர்தலில் எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவைச் சேர்ந்தவரே போட்டியிட வேண்டும் என்றும் கட்சி உறுப்பினர்கள் விரும்புகின்றனர். வேறெவரையும் நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை.

அதிபர் தேர்தலில் ஜேவிபி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும்” என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *