மேலும்

மாதம்: May 2019

சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா

சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு – நாடாளுமன்ற எதிரொலிகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை,  அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது.

வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற விருப்பம்

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு குறித்து சிறிலங்கா பிரதமருடன் சீன தூதுவர் ஆலோசனை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, சீன தூதுவர் செங் ஷியுவான் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஞானசார தேரர் விடுதலை – கூட்டமைப்பு கடும் கண்டனம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்க உடன்பாடு இல்லை – அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவில் நிரந்தரமான அமெரிக்க தளத்தை அமைப்பது தொடர்பான எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் 8 எம்.பிக்கள் – மகிந்த, மைத்திரி அணிகள் மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக, 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்துள்ளார்.

நாளாந்தம் விசாரிக்கப்படவுள்ள கோத்தாவுக்கு எதிரான வழக்கு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

விடுதலையானார் ஞானசார தேரர் – இனி ஆன்மீக வழி தான் என்கிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.