மேலும்

வடக்கில் வெள்ளத்தினால் 74 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 74 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,520 குடும்பங்களைச் சேர்ந்த, 20,737 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில், 12,118 குடும்பங்களைச் சேர்ந்த 39,932 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில், 4257 குடும்பங்களைச் சேர்ந்த, 12,642 பேரும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில், 455 பேரும், மன்னார் மாவட்டத்தில், 85 பேரும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் நிலவரங்களின் படி, 39 நலன்புரி நிலையங்களில், 11,310 தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *