மேலும்

50 நாள் ஆட்சியில் சீரழித்து விட்டார் மகிந்த – சஜித்

50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, பிரதமராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்காக வீடுகளை அமைப்பதற்கு, வீடமைப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட 2600 மில்லியன் ரூபா இந்தக் காலகட்டத்தில் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இணைந்து பணியாற்ற வேண்டும்.

2015இல், இரண்டு பேரும் இணைந்து பணியாற்றுவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இது இரட்டை அதிகாரம். யாரும் தனி ஆதிக்கம் செலுத்த முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *