இன்று பிற்பகல் அனைத்துக் கட்சிகளையும் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் அ்ங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்துக் கலந்துரையாடவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 5 மணிக்கு அதிபர் செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பங்கேற்குமாறு சபாநாயகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.