மேலும்

விரைவில் மாகாணசபைத் தேர்தல் – சிறிலங்கா அதிபர்

புதிய அரசாங்கம் கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகராமவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்,

“மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுடன், விரைவில் கலந்துரையாடவுள்ளேன்.

ஜனநாயகத்தையும் மக்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் இன்னொரு நடவடிக்கையாக இது இருக்கும்.

அரசியல் தலைமைத்துவம் இல்லாததால், ஆறு மாகாணசபைகளின் அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் இன்றி உள்ளனர்.

வடக்கில் உள்ள மக்களின் மனக்குறைகளுக்குத் தீர்வு காணுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண, கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதவியில் இருந்த அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது.

வடக்கின் வீடமைப்புத் திட்டம் வெறுமனே அமைச்சரவைக் கலந்துரையாடலுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *