சிறிலங்கா போர்க்கப்பல்கள் இந்தியாவுக்குப் பயணம்
சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.
எஸ்எல்என்எஸ் சாகர, எஸ்எல்என்எஸ் சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களே நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றன.
எஸ்எல்என்எஸ் சாகர போர்க்கப்பலில், கப்டன் ஜனக நிசங்க தலைமையில், 200 அதிகாரிகள், கடற்படையினரும், கப்டன் சந்திம சில்வா தலைமையிலான எஸ்எல்என்எஸ் சுரனிமல போர்க்கப்பலில், 120 கடற்படையினரும், இந்தியா சென்றுள்ளனர்.
இந்தியக் கடற்படையுடன் இணைந்து, சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று இந்தப் போர்க்கப்பல்கள், கொச்சி துறைமுகத்தை சென்றடையும். எதிர்வரும், 11ஆம் நாள் இந்தக் கப்பல்கள், கொழும்பு நோக்கிப் புறப்படும்.