மேலும்

ஈரான் மீதான தடைகளால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு

அடுத்தமாதம் நடைமுறைக்கு வரவுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், சிறிலங்கா இன்னும் அதிகமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

“வரும் நொவம்பர் மாதம் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் அப்போது தான் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதனால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படலாம். அதன் பின்னர், நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஈரானுக்கு நாம் தேயிலை ஏற்றுமதி செய்ய முடியுமா என்று தெளிவாகத் தெரியவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *