மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் போராட்டங்கள் தீவிரம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்யக் கோரியும், அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

யாழ். பேருந்து நிலையம் மூன்பாக நேற்றுக்காலை நடத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன் இவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நேற்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வவுனியா நகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இதில் பெருமளவிலான மக்களைப் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *