லெப்.கேணல் எரந்த பீரிசை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி லெப்.கேணல் எரந்த பீரிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட லெப்.கேணல் எரந்த பீரிசிடம், வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து அவர கைது செய்யப்பட்டார்.
நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, லெப்.கேணல் எரந்த பீரிசை எதிர்வரும் செப்ரெம்பர் 28ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 7ஆவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் எரந்த பீரிஸ் திருகோணமலையில் பணியாற்றிய வந்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, இதுவரை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.