அதிருப்தி வெளியிட்ட சீனா – பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர்
சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவொன்று இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இதன்போது, சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடியது,
அத்துடன் எதிர்காலத்தில் சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, சிறிலங்காவுக்கு நன்மையளிக்கும் திட்டங்களில் எழுகின்ற எந்த பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சீனக் குழுவிடம் சிறிலங்கா அதிபர் உறுதியளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் திட்டம் மற்றும் வடக்கில் வீதிகளை அமைக்கும் திட்டங்களில் இருந்து சீனா நீக்கப்பட்டு, அவற்றை இந்தியாவுக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தே இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.