தேவைப்பட்டால் மாத்திரம் ஊடக மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் பங்கேற்பார்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், இராணுவப் பேச்சாளர், தேவைப்பட்டால் மாத்திரமே பங்கேற்பார் என்று, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக மாநாடு நடத்தப்படும் போது, சிறிலங்கா இராணுவப் பேச்சாளரும் அதில் பங்கேற்று வந்தார்.
எனினும், தற்போது, அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மாத்திரம் இராணுவப் பேச்சாளர் இந்த ஊடகச் சந்திப்பில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது புதிய முடிவு அல்ல என்றும், ஆனால் இதனை நடைமுறைப்படுத்தும் முடிவே அண்மையில் எடுக்கப்பட்டது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.