மேலும்

சிறிலங்கா இராணுவத்தினர் 12 பேர் கைது

சிறிலங்கா இராணுவத்தினர் 12 பேர், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின்  மேஜர் ஜெனரல் தர அதிகாரி, வாதுவ பிரதேசத்தில், மூன்று மாடி ஆடம்பர வீடு ஒன்றைக் கட்டி வந்தார்.

அதன் கட்டுமானப் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 12 படையினரை ஈடுபடுத்தியிருந்தார்.

இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று அந்த இடத்துக்குச் சென்ற போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 12 சிறிலங்கா இராணுவத்தினரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *