4.4 இலட்சம் இந்தியர்கள் குறிவைக்கிறது சிறிலங்கா
இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 4.4 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குடன் செயற்படுவதாக, சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 3,84,628 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த ஆண்டில், 4,40,000 சுற்றுலாப் பயணிகளை இந்தியாவில் இருந்து ஈர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.