பிரித்தானிய இளவரசர் சிறிலங்கா வந்தார்
ஐந்து நாட்கள் பயணமாக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் தமது துணைவியுடன் சிறிலங்கா வந்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசரை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வரவேற்றார்.
எதிர்வரும், பெப்ரவரி 4ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளில், பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட், பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளனர்.
அன்றைய நாளே அவர் சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளார்.