மேலும்

இந்தியர்களின் இதயத்தில் சிறிலங்காவுக்கு சிறப்பான இடம் – இந்தியத் தூதுவர்

Taranjit-Singh-Sandhuஇந்தியர்களின் இதயத்தில் சிறிலங்காவுக்கு சிறப்பான இடம் ஒன்று இருப்பதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட இந்திய குடியரசு நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘ இருதரப்பு உயர்மட்டப் பயணங்களின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலமடைந்திருக்கின்றன.

வெயிலிலும் மழையிலும், இந்திய- சிறிலங்கா உறவுகள் பலமாகவே இருந்திருக்கின்றன.

சிறிலங்காவுக்கு இந்தியா 2.76 பில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்கியுள்ளது. இதில் 545 மில்லியன் டொலர் கொடையாக வழங்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *