இந்தியர்களின் இதயத்தில் சிறிலங்காவுக்கு சிறப்பான இடம் – இந்தியத் தூதுவர்
இந்தியர்களின் இதயத்தில் சிறிலங்காவுக்கு சிறப்பான இடம் ஒன்று இருப்பதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட இந்திய குடியரசு நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘ இருதரப்பு உயர்மட்டப் பயணங்களின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலமடைந்திருக்கின்றன.
வெயிலிலும் மழையிலும், இந்திய- சிறிலங்கா உறவுகள் பலமாகவே இருந்திருக்கின்றன.
சிறிலங்காவுக்கு இந்தியா 2.76 பில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்கியுள்ளது. இதில் 545 மில்லியன் டொலர் கொடையாக வழங்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.