ஐதேக பிரதி அமைச்சர் மீதும் ஆணைக்குழு குற்றச்சாட்டு
ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராகவும், விசாரணைகளை நடத்த சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார மீறல்கள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில், தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்தவும். பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அடாத்தாகக் கைப்பற்றியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் பிரதி அமைச்சர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.