மைத்திரியிடம் வெற்றிக்கிண்ணம்
2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான, வெற்றிக்கிண்ணம் சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
நேற்று கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட உலகக் கிண்ணம் இன்று காலை சிறிலங்கா அதிபரின் இல்லத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
உலக கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் உலகின் 54 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.