மேலும்

சீனாவின் இரண்டாவது கட்ட கொடுப்பனவும் சிறிலங்காவுக்கு கிடைத்தது

Srilanka-chinaஅம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதற்கான இரண்டாவது கட்டக் கொடுப்பனவை, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்காவிடம் வழங்கியுள்ளது.

இதன்படி, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் 97.365 மில்லியன் டொலருக்கான காசோலை நேற்று சிறிலங்கா துறைமுக அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 பில்லியன் டொலருக்கு, சீன நிறுவனம் கடந்த டிசெம்பர் மாதம் குத்தகைக்குப் பெற்றுக் கொண்டது.

இதற்கான முதற்கட்ட கொடுப்பனவாக 292 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது.

இந்தநிலையில், இரண்டாவது கட்டக் கொடுப்பனவு நேற்று வழங்கப்பட்டது.

ஆறு மாத காலத்துக்குள் எஞ்சிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *