மேலும்

அஞ்சல் மூல வாக்குகள் 11ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும்

postal-votesஉள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் எதிர்வரும் 11 ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 560,536 அரசாங்கப் பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்ற அரசாங்கப் பணியாளர்களின் பட்டியல்கள் நேற்று மாவட்ட  தேர்தல் பணியகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 22ஆம் நாள் தேர்தல் பணியகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும்,  ஏனைய அரச நிறுவனங்களில்  எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களிலும் அஞ்சல் மூல வாக்குகளை அளிக்க முடியும் என்றும்,  மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *