மேலும்

சீனா வழங்கிய 292.1 மில்லியன் டொலர் மத்திய வங்கியில் வைப்பு

chinese-chequeஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கியின் அனைத்துலக நடவடிக்கைத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சீன நிறுவனம் முதற்கட்டமாக வழங்கிய கொடுப்பனவுக் காசோலை மூலம், 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட டொலர் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இது முழுக் கொடுப்பனவின் 30 சதவீதமாகும். கடந்த 9ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிக்கும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போது இந்த முதற்கட்ட கொடுப்பனவு சிறிலங்கா பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

ஒரு மாதம் கழித்து மேலும் 10 வீத கொடுப்பனவு வழங்கப்படும். எஞ்சிய 60 வீத கொடுப்பனவும், ஆறு மாதங்களில் செலுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *