மேலும்

சிறிலங்காவில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்

yi-xiangliangசிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய யி ஷியான்லியாங், பதவிக்காலம் முடிந்து நாளை நாடு திரும்பவுள்ளார்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதம் கழித்து- 2015 பெப்ரவரி 14ஆம் நாள், சிறிலங்காவுக்கான 20 ஆவது சீனத் தூதுவராக யி ஷியான்லியாங் கொழும்பில் பொறுப்பேற்றிருந்தார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கொழும்பில் பணியாற்றிய அவரது பணிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் நாளை பீஜிங் திரும்பவுள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் சீன முதலீடுகள் கேள்விக்குறியாக மாறியிருந்த சூழலில், சீனத் தூதுவராகப் பொறுப்பேற்றிருந்த யி ஷியான்லியாங், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா வசப்படுத்தியுள்ள நிலையில் நாடு திரும்புகிறார்.

இவர் சிறிலங்காவில் பணியாற்றிய காலத்தில், நாட்டின் 9 மாகாணங்களுக்கும், 25 மாவட்டங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் இருந்து விடைபெறுவது தொடர்பாக விடுத்துள்ள செய்தி ஒன்றில், புதிய பட்டுப்பாதை திட்டம், சீன- சிறிலங்கா உறவுகளை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *