சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தெகியத்தகண்டிய, பதியத்தலாவ பிரதேச சபைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால், கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.
இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவை நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.