மேலும்

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு

postal-votesஉள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் அறிவித்துள்ளார்.

93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த நொவம்பர் 28ஆம் நாளும், ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் டிசெம்பர் 4ஆம் நாளும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக கால எல்லையை டிசெம்பர் 22 ஆம் நாள் வரை நீடித்திருப்பதாக  மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *