மேலும்

வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேட்சைக் குழு கட்டுப்பணம்

selvendra-indipendent groupவல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

பட்டயக்கணக்காளர் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழுவைச் சேர்ந்தவர்களே நேற்று, யாழ் மாவட்ட தேர்தல் பணியகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தி, வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில், செயற்பட்ட வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்தவர் செல்வேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

selvendra-indipendent group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *