மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பதற்கு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்

Hambantota harborஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான அரசிதழை அறிவிப்பை அங்கீகரிப்பதற்காக நாளை மறுநாள் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்திலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக நிர்வகிக்கும் உடன்பாட்டுக்கு அமைய, துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கான அரசிதழ் அறிவிப்பை அங்கீகரிக்க, நாளை மறுநாள் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதையடுத்து, நாளை மறுநாள் இரவு 7.30 மணிக்கு, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்ட அரசிதழ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இரவு, 9.30 மணி வரைக்கும் விவாதம் நடத்தப்படும்.

மூலோபாய அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், இந்த அரசிதழுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *