பெப்ரவரி 17இற்கு முன் உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய
உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
“உள்ளூராட்சித் தேர்தலை சனிக்கிழமை ஒன்றில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.
தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமையிலோ, விடுமுறை நாளிலோ தேர்தல் நடத்தப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 10ஆம் நாள் தேர்தல்கள் நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,