மேலும்

இடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்க கூடுகிறது அரசியலமைப்பு சபை

parliamentபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக, சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

நாளை ஆரம்பமாகும் இந்த விவாதம், செவ்வாய், புதன் ஆகிய நாட்களிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.

தினமும் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை இந்த விவாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீது விவாதம் நடத்தி, புதிய அரசியலமைப்புக்கான வரைவு தயாரிக்கப்படும் என்றும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *