தேசிய பாதுகாப்புக்கான நவீன அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும் – ருவான் விஜேவர்த்தன
தேசிய பாதுகாப்புக்கான நவீன அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த, சிறிலங்கா விமானப்படையின் கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு நாடுகளின் முதன்மையான நோக்கமாக இருக்கின்றது. ஏனைய நாடுகளுடன் எப்படி மிகச் சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு இணக்கப்பாடுகளில் நுழையலாம் என்று தலைவர்கள் முனைகின்றனர்.
கொழும்பு விமான கருத்தரங்கு போன்ற அனைத்துலக கருத்தரங்குகள், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கு பலமான அடித்தளமாக அமையும்.
சைபர் தாக்குதல்கள்,ஆளில்லா விமானங்கள், நாசவேலை, தற்கொலைகள், தீவிரவாத உத்திகள், ஊடக பரப்புரைகள், கரந்தடித் தாக்குதல்கள், அச்சுறுத்தும் உத்திகள் என்பன இன்று பொதுவான பிரச்சினையாக உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.