மேலும்

வித்தியா கொலை வழக்கு – 4 எதிரிகள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது தீர்ப்பாயம்

gavelபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், நான்கு எதிரிகள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர் என்பதை, மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

அரச தரப்புச் சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியம் மற்றும் மற்றொரு கண்டகண்ட சாட்சியான நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தின் அடிப்படையிலும், சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் சாட்சியத்தின் அடிப்படையிலும்,  மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு தீர்ப்பாயம் வந்துள்ளதாக, நீதிபதி சசிமகேந்திரன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டு வன்புணர்வில், 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் , 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் , 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் , 6ஆம் எதிரியான சிவதேவன் துசாந்த் ஆகியோர்  ஈடுபட்டுள்ளனர் என்பதையும் தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *