மேலும்

ஆறு மாதங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஓய்வு

sagala-ratnayakaபயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய அவர்,

“பயங்கரவாத தடைச்சட்டம் கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தப்படவில்லை.

2013ஆம் ஆண்டில் இருந்து, 695 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  சிலர் மீதான குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதையடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *