மேலும்

வெள்ளியன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

zeid-ms-ramil (3)ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்  ஹுசேனை வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

இந்தச் சந்திப்பு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மூடப்பட்ட அறையில் சிறிலங்கா அதிபரும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் தனியாக இந்தச் சந்திப்பில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கச் செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதமாகச் செயற்படுவதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அண்மையில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *