அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன், முதல்பெண்மணி ஜெயந்தி சிறிசேனவும், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபரின் உரை நாளை மறுநாள் பிற்பகல் இடம்பெறவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, பல்வேறு உலகத் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.