மேலும்

சிறிலங்காவுக்கு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

HRW2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தின்  இலக்குகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா விடயத்தில், பல்வேறு நல்லிணக்கப் பணியகங்களை அமைப்பதும், முன்னேற்றங்கள் பற்றிப் பேசுவதும், 2015 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணையானது அல்ல, என்ற விடயத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள அரசாங்கங்கள், தெளிவாக இருக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியத்துக்காக பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

“நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள், தீர்மானம் முழுமையான நடைமுறைப்படுத்தப்படுவதைக் காண வேண்டிய தேவை உள்ளது. நீதி கிடைப்பதற்கான ஆதாரங்களை அவர்கள் காண வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒருமனதான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா பெருமளவில் தோல்விடைந்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பாக மொழியால் பேசுவதை விட, அதிகமாகச் செய்ய முடியும் என்பதை சிறிலங்கா அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *