மேலும்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சப்ரகமுவ மாகாணசபையும் ஆதரவு

20th-amendmentசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு, சப்ரகமுவ மாகாணசபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இன்று சப்ரகமுவ மாகாணசபையில் இதுதொடர்பான நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 29 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சட்டவரைவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

நேற்று கிழக்கு மற்றும் மேல் மாகாணசபையில் நேற்று 20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபையில் நேற்று 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வாக்களித்திருந்தது.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்வைக்கப்பட்ட திருத்தச்சட்ட வரைவில், தம்மால் முன்மொழியப்பட்ட திருத்தங்களை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ள நிலையில், இந்த முடிவை கூட்டமைப்பு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *