சுஸ்மாவை சந்தித்தார் திலக் மாரப்பன
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இநதிய வெளிவிவகார அமைச்சர் சுமூஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் உள்ளிட்ட இருதரப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வரலாற்று ரீதியான உறவுகளின் மீது இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், அண்மைய உயர்மட்டப் பயணங்களின் போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் தொடர்ச்சி உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.