அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சந்திப்பு
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி ஹரிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஆசிய –பசுபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் 20 ஆவது கருத்தரங்கு கனடாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஆரம்பமாகிய இந்தக் கருத்தரங்கு இன்று வரை இடம்பெறுகிறது.
இதில், சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பங்கேற்றுள்ளார்.
இந்தக் கருத்தரங்கின் ஒரு பக்க நிகழ்வாக அவர், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி ஹரிசை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.