மேலும்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பு- இந்திய இராணுவத் தளபதி கவலை

general-bipin-rawatபிராந்திய பாதுகாப்புச் சூழலில் சீனா தனது தலையீட்டை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருவதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவின் அயல் நாடுகளான சிறிலங்கா, பாகிஸ்தான், மாலைதீவு, மியான்மார் போன்றவற்றுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை சீனா அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வழியாக, சீன- பாகிஸ்தான் பொருளாதார பாதை அமைக்கப்படுவது, இந்தியாவின் இறைமைக்கு சவாலாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *