மேலும்

சிறிலங்காவின் நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

thalatha- maithriசிறிலங்காவின் நீதி அமைச்சராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்கிரம பெரேரோ பொறுப்பேற்றுள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவையில் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சராகப் பதவி வகித்த விஜேதாச ராஜபக்ச நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபரால் பதவியில் இரு்ந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சரான தலதா அத்துகோரள இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், நீதி அமைச்சராக, பொறுப்பேற்றுக் கொண்டார்.

thalatha- maithri

அதேவேளை, நிலையான அபிவிருத்தி மற்றும் வன உயிரினங்கள் அமைச்சரான காமனி ஜெயவிக்கிரம பெரேரா,   பௌத்த சாசன அமைச்சராக பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *