மேலும்

விஜேதாசவை பதவியில் இருந்து நீக்கினார் சிறிலங்கா அதிபர்

wijedasa rajapaksaசிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரி பால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கையை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டிருப்பதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், இதுபற்றி விஜேதாச ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் கடிதம் மூலம் அறிவித்திருப்பதாகவும் அதிபர் செயலக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *