சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள திலக் மாரப்பனவுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதுவர், அதையடுத்து. இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் மற்றும் இந்திய துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.