மேலும்

யாழ்ப்பாணத்தில் தேடுதல் – 27 இந்தியர்கள் கைது

Arrestயாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, நுழைவிசைவு விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 27 இந்தியர்களை சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 இந்தியர்களில் ஐந்து பேர் பெண்களாவர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவு நேற்று இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டது.

இவர்களில் 20 பேர், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் ஏனையவர்கள், நுழைவிசைவு விதிமுறைகளுக்கு மாறாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா நுழைவிசைவில் வந்து, சிறிலங்காவில் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *