மேலும்

அனுராதபுர சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு

prisionஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமது வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கோரியே, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா நீதிமன்றத்தில் தம் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிய, இவர்கள் மூவரும் இன்று காலையில் இருந்து உணவைத் தவிர்த்து வருகின்றனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் 20 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *