மைத்திரி- ரணில் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்காக, தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகள் தொடர்ச்சியாக அங்கம் வகித்ததை முன்னிட்டு இன்று நடந்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இரா.சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
‘தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் இணைந்து பணி வேண்டியது அவசியம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.